Monday, October 25, 2010

வெற்றியின் மறுபக்கம்

மனதை
திறந்து வைத்திடாதே
எவனாவது வந்து
புகுந்து கொள்வான்
மனதை
விரித்து வைத்திடாதே
எவனாவது வந்து
அமர்ந்து கொள்வான்
மனதை
ஈரமாய் வைத்துவிடாதே
எவனாவது வந்து
ஒட்டிக் கொள்வான்
மனதை
உலர வைத்துவிடாதே
எவனாவது வந்து
உடுத்திக் கொள்வான்......!



எழுதியவர் - மு.மேத்தா

No comments:

Post a Comment