- Homemain page
- Aboutthe author
- Contact ussay hello
- Free Blogger Templates
- Subscribe to RSSkeep updated!
Sunday, March 27, 2011
Tuesday, March 22, 2011
மானிடா
மானிடா!சற்றே சிந்தித்து பார்
இங்கு நான் சொல்வது
புதிய கதையல்ல
புராதன காலம் முதல்
பூவுலகில் கூறிவரும்
பாரம்பரிய கதையே!
அன்று ஆண்டவனால்
ஆண் உருவாகினான்
பூமியின் சொத்தான
மண்ணில் இருந்து
புதுப் பொலிவுடன்
உயிரும் கொடுக்கப்பட்டான்
அவனே ஆதாம்!
சற்றே சிந்தித்த இறைவன்
ஆடவனே உன்
தனிமையை போக்கிட
உன் விலா என்பெடுத்து
ஆக்கிவைத்தான் பெண்ணவளை
உயிரும் கொடுத்தான்
உணர்வு பூர்வமாய்
அவளே ஏவாள்!
உன் நெஞ்சினிலிருந்து
உருவாகிய பெண்ணை
உன் நெஞ்சுக் கூட்டினுள்
காத்திட மாட்டாயா?
பெண்ணடிமை ஒழித்து
பேதமை போக்கி
பெருவாழ்வு கொடுத்திடு
பெண்ணினம் வாழ்ந்திட!
Monday, March 21, 2011
அன்புக் காதலே!
பலரை சந்தித்தேன்
பாசமான தோழியாக!
பல்கலை வளாகத்தில்
பாவையே உன்னை
பார்த்ததும் மயங்கினேன்
பறிகொடுத்தேன் இதயத்தை
மோகினியே உன்னுடன்
மோத நான் தயாரில்லை
மெதுவாக உன் மனதில்
மொத்தமாய் இடம் பிடிப்பேன்
அதுவரை அமைதியாய்
அடக்கி வைப்பேன் ஆசைகளை
அன்பினால் ஆகாதது
அவனியில் ஏதுமில்லை
ஆசை நாயகியே!
ஆதாம் ஏவாள் முதல்
நாகரிக காலம் வரை
ஆசை கொள்வதன் பெயர்
அன்புக் காதலே!
Saturday, March 19, 2011
காதலித்த காரணத்தால்
பள்ளி பருவத்தில்
பார்ப்பவரை கவர்ந்திழுக்கும்
பருவ மங்கை என்னை
பார்த்த்தும் காதல் செய்தாய்
சிட்டுக் குருவியாய் என்னை
சிறகடித்து பறக்க வைத்தாய்
கடற்கரை மணலிலே
காதல் மொழி பொழிந்து
கைகோர்த்து வலம் வந்தாய்
நம் படிப்பு முடிந்தும்
வாழ்க்கையை எண்ணி
வாய் விட்டேன் திருமணத்திற்காய்
காரணங்கள் பல சொல்லி
காலம் தாழ்த்தி நின்றாய்
பொறுமையாய் காத்திருந்தேன்
பொறுப்பான உன் பதவிக்காய்
பதவியும் கிடைக்க
பறந்தாய் புகழின் உச்சிக்கு
பூரித்தேன் உன் நிலை கண்டு
பெற்றவளிடம் மணம் பேச
உன் பதவிக்காய் சீர் கேட்டு
பாசத்தை விலை கேட்டாள்
சீதனம் எனும் பேரில்!
பாசத்தை விலை கேட்ட
பாசமான உன் தாயிடம்
போராட வழியின்றி
பலிக்கடா ஆனது என்
பணத்திற்காய் பாதை மாறிய
பாசாங்கு காதலனே
நீ இன்று குதூகலமாய்
புதிய வாழ்க்கை துணையுடன்
நான் மட்டும் இங்கு
முதிர் கன்னியாய்.........!
Friday, March 18, 2011
Thursday, March 17, 2011
உன் மடல்
உண்மை மறந்து
Tuesday, March 15, 2011
இனியவளே...!
மெல்லிய காற்றினிடைமென்மையான பூக்களின்
மெதுவான ஆட்டம் பார்த்து
மெல்லிடையாளே உன் நினைவு
மெதுவாக அலை மோதும்
காந்த கண் பார்வையும்
கண் சிமிட்டும் உன் சிரிப்பும்
காண்பவர் மனதையெல்லாம்
கண்டவுடன் கொள்ளை கொள்ளும்
துரு துரு குறும்பும்
துள்ளித் திரியும் பாதமும்
தூக்கத்தின் போது கூட
துவம்சங்கள் பல செய்யும்
கன்னி உன்னை காண எண்ணி
காத்திருந்த காலம் போய்
இன்று என் கைக்குள்ளே
இனிய இல்லத்தரசியாய்....!
Sunday, March 13, 2011
சலனப்பட்டது ஏனோ?
அன்பே!Thursday, March 3, 2011
புதிய உதயம்
Wednesday, March 2, 2011
Categories
- காதல் கவிதைகள் (20)












