- Homemain page
- Aboutthe author
- Contact ussay hello
- Free Blogger Templates
- Subscribe to RSSkeep updated!
Thursday, September 29, 2011
Wednesday, September 28, 2011
அந்த ஒரு நொடி
பழகிய பலருக்குள்
புரிந்த சில உறவுகளின்
உண்மையான அன்பும்
எதிர்பார்த்த பாசமும்
உயிரான புரிந்துணர்வும்
ஒரு நொடி பொய்த்தாலும்
பல நாட்கள் இங்கே
பார்த்து பார்த்து பழகிய
அத்தனை இன்பமும்
அந்த நொடிப் பொழுதினிலே
கை தவறி வீழ்ந்து விட்ட
கண்ணாடிக் குவளை போல
துகழ்களாய் நொருங்கிவிடும்.
Tuesday, September 27, 2011
எப்படி புரிய வைப்பேன்
உன்னை பார்க்க மறுக்கும்
கண்களுக்கும்
உன்னோடு பேச மறுக்கும்
உதடுகளுக்கும்
உன்னை தேட மறுக்கும்
இதயத்துக்கும்
உன்னை தீண்ட மறுக்கும்
ஸ்பரிசங்களுக்கும்
எப்படி புரிய வைப்பேன்
நீ தான் என் வாழ்க்கை என்று!
Sunday, September 25, 2011
Thursday, September 22, 2011
காதலின் காத்திருப்பு

பனி விழும் மலைச்சாரல்
பட்டுத் தெறிக்கும் மழைத்துளி
சில்லென்ற பரந்த வெளி
சிலிக்க வைக்கும் கூதல் காற்று
சிற்றிடையாளின் காத்திருப்பு
சிறிதான ஏக்கத்துடன்!
குளிர்சாதன பெட்டியிலிருந்து
சற்று முன் எடுத்து வைத்த
தண்ணீர் போத்தலை போல்
முத்து முத்தாய் நீர்த்துளிகள்
மாதவளின் வதனமெங்கும்
மெல்லவே துளிர்த்தது!
இத்தனைக்கும் காரணம்
இனியவனின் வருகைக்கான
இதமான காத்திருப்பு
இருந்தும் இதயமெங்கும்
இனம் புரியா தவிப்பு
இடையிடையே இருப்பது தான்
அடிக்கடி அவள் பர்வை
கடிகாரத்தின் முட்களை
ஆதங்கமாய் நோட்டமிட
காத்திருப்பு தொடர்ந்தது
காதலன் வருகைக்காய்
நிமிடங்களை எண்ணியபடி
சற்றே கோவத்துடன்!
இடையினை தழுவிய
இதமான அணைப்பினால்
இலாவாக திரும்பியவளை
இனிக்கும் முத்தங்களால்
தாமத்தின் காரணத்தை
மௌனமாக பகிர்ந்து நின்றான்!
எத்தனை தான் ஊடல் அங்கு
எட்டி நின்று பார்த்தாலும்
இனியவனின் அணைப்புக்குள்
அத்தனையும் அங்கிருந்து
கதிரவனை கண்ட
பனிதுளி போல
காற்றாக பறந்தது
காதலுக்கு மட்டும் தான்
கண்டிப்பாய் இது சாத்தியம்!
Tuesday, September 20, 2011
வளர்ச்சி வேகம்
நியாயமா?
Monday, September 19, 2011
Saturday, September 17, 2011
Friday, September 16, 2011
Saturday, September 10, 2011
செப்ரெம்பர் 11

இரட்டை சகோதரராய்
கைகோர்த்து கதை பேசி
இறுமாப்புடன் நின்று
ஆயிரம் உறவுகளை
அன்போடு எம்மில் தாங்கி
களிப்புடன் இருந்த நம்மை
காலனவன் வந்து
நொடி கூட இரக்கமின்றி
நொருக்கி விட்டு சென்று விட்டான்
நாம் உலகை விட்டு
தொலைதூரம் பிரிந்து சென்று
இன்றோடு முழுமையாக
பத்தான்று பறந்தாலும்
எம்மை நினைவு கூற என
எத்தனையோ உள்ளங்கள்
இன்றும் இவ்வுலகில்
வாழ்ந்து கொண்டு உள்ளன.
உலகையே உலுக்கி நிற்கும்
எம் இருவரின் அழிவும்
மூவாயிரத்திற்கும் மேலான
மனிதர்களின் இறப்பும் கூட
தீவிரவாதத்தை அழிக்கவில்லை
நம் அழிவில் கூட இந்த
நானிலம் திருந்த வில்லை
எம் அழிவுக்கு அரசு இட்ட பெயர்
செப்ரெம்பர் 11 தாக்குதல் என
செத்தும் வாழ்கிறோம் பலர் மனங்களில்
எம்முள் வாழ்ந்த காரணத்தால்
எம்மோடு சேர்ந்திங்கு
எமனால் குடிக்கப்பட்ட
அத்தனை உறவுகளின்
ஆன்மா சாந்தியடைந்து
அமைதி பெற அந்த
ஆண்டவனை வேண்டுகிறோம்
இனியாவது இவ் உலகில்
தீவிரவாதம் ஒழிந்திட
பிரார்த்திப்போம்!
Sunday, September 4, 2011
Categories
- காதல் கவிதைகள் (20)












