Monday, November 7, 2011

தடுமாற்றம்


அன்பென்ற மூன்றெழுத்தி்ல்
ஆசையாய் இணைந்த இதயம்
பாசம் என்ற கடலிலே
நட்பென்ற முத்தெடுக்க
நீச்சலடிக்க தொடங்கையிலே
பிரிவென்ற பேரலை
சுனாமி போல வந்திங்கே
நட்புக்கொண்ட நெஞ்சங்களை
தடுமாற வைக்கிறது

Friday, November 4, 2011

பிரிவின் முகவரி


பௌர்ணமி நிலவான
உன் சிறு முகம்
அதில் பால்கடல் போன்ற
உன் விழி வெண்படலம்
மென்மையாய் கதை பேசும்
உன் கரு விழிகள்
இத்தனையும் இன்று
ஆயிரம் அர்த்தங்களுடன்
ஆதங்கமாய் கேட்கின்றன
நம் பிரிவின் முகவரியை!

Wednesday, November 2, 2011

என் ஆசை


இனியவளே!
உன்னை
பார்த்த நொடி முதல்
ஆயிரம் ஆசைகள்
அத்தனையும் உனக்காய்
அன்பு வரிகளில்!

குழந்தையாய் உன்னோடு
குதூகலித்திட ஆசை
கொட்டும் அருவியில்
குளித்திட ஆசை!

மாலை பொழுதிலே
மடிசாய ஆசை
மட்டில்லா மகிழ்ச்சியில்
திழைத்திட ஆசை

கடற்கரை மணலிலே
கைகோர்த்திட ஆசை
கானல் நீரெல்லாம்
நிஜமாக ஆசை

நிலவின் ஒளியில்
நின் முகம் காண ஆசை
நட்சத்திரங்களை எண்ணி
முத்தமிட ஆசை

தோழமை கொண்டு
தோள் சாய ஆசை
தோன்றிய கனவுகள்
நனவாகிட ஆசை

எத்தனையோ ஆசைகள்
எண்ணத்தில் தோன்றிட
அத்தனையையும் உள்ளத்தில்
ஆசையாய் அடக்கினேன்

அன்பே உன்னை
கைபிடிக்கும் நாளிலே
மொத்தமாய் உன்னில்
முழுமையாய் சரணடைவேன்

Monday, October 31, 2011

முத்த மழை


நினைவுகளோடு வாழாதே
நிஜமாக வந்து விடு

இனியுள்ள வாழ்வுதனை
இனிமையாக்கி சென்று விடு

சுட்டெரிக்கும் வெயிலிலும்
இத்தனை குளிர்மையா?

அத்தனையும் உந்தன்
ஆசையுள்ள முத்த மழை

நனைந்தேன் உன் மழையினிலே
இழந்தேன் என் நினைவுதனை

உன்னோடு இங்கு நனைந்திட ஆசை
அத்தனையும் உந்தன் முத்தமழையினிலே

எப்படி நனைந்தாலும் சலிக்கவில்லை
உன்னுடனான முத்தக் குளியல் மட்டும்!

Saturday, October 29, 2011

அவமானச் சின்னமாய்!


அன்னையே!
அன்று நீ
அவமானச் சின்னமாய்
தூக்கி போட்ட உன் உறவு
இன்று
அநாதை எனும் பெயரோடு
அவனியில் வாழ்கிறது
கண்டும் காணாதது போல்
காலத்தை போக்கிறாயா?
இன்னும் என் நினைவோடு
ஏக்கமாய் வாழ்கிறாயா?
உனக்கான வருகைக்காய்
பூவோடு உன் பூ இங்கே!

தவிக்கிறது மனது


நாம் பிரியப்போகும்
தருணங்களை எண்ணி
தடுமாறும் மனதோடும்
விழிபார்க்க முடியா
விடைபெறும் நிமிடங்களை
வலியோடு நினைத்தும்
தடுமாறுகிறது மனது
தடுக்க வார்த்தை தெரியாது
தவிக்கிறது மனது
புரிவாயா அன்பே!

Friday, October 28, 2011

காற்று பட்ட கற்பூரமாய்

கனவுகளை சுமந்து
கற்பனைகளுடன் வளர்த்த காதல்
காற்று பட்ட கற்பூரமாய்
கணபொழுதில் மறையுமென
கனவில் கூட நினைக்கவில்லை

கரைந்து விட்ட கற்பூரமோ
கமகமக்கும் சுகந்தமுடன்
காற்றிலே மறைந்தது
காதலின் நினைவுகளோ
காயங்களை தருகிறதே!

காதலே உன்னை
கற்பூரமாய் பார்க்க
கடைசி வரை முடியவில்லை
காயத்திற்கு மருந்திட
கனவுகளோடு வாழ்கிறேன்!