Friday, June 25, 2010

உரிமை உள்ளவர்கள் மீது...

"அன்பு"

யார் மீதும் காட்டலாம்

ஆனால்

"கோபம்"

உயிருக்கு மேலான

உரிமை உள்ளவர்கள்

மீது மட்டுமே காட்ட முடியும்





- படித்ததில் பிடித்தது -

"இதயமே".......

உன்னை நான் பார்த்ததில்லை.....
என்னை நீ பார்த்ததில்லை.....
பின் எதற்காக நான் வாழ நீ துடிக்கிறாய்
"இதயமே".......

Tuesday, June 22, 2010

என் பாசம்

கடல் நீரை வேண்டுமென்றால்

குடுவைக்குள் எடுத்துத் தரலாம்

ஆனால்

ஆர்ப்பரிக்கும் அதன் அலைகளை

எப்படி நான் அதற்குள்

அடைக்க முடியும்?

என் பாசம் அது போல் தான்





- படித்ததில் பிடித்தது -

தோற்றுவிட்டேன்

ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில்
தேர்வில் தோற்று விட்டேன்...
தேர்ச்சி அடைந்து இருப்பேன்!!!!
"இரும்பை விட கடினமானது எது?"
என்ற கேள்விக்கு...
உன் நினைவுடன்...
உன் பெயரை எழுதாமல்..
"வைரம்" என எழுதி இருந்தால்...




- படித்ததில் பிடித்தது -

"புனிதமான காதல்"

உன் கூந்தல்பூவாக இருக்க ஆசைப்பட்டேன்.,

உன் கூந்தல் மணத்தை நுகர்ந்து கொண்டே இருப்பதற்காக!

உன் காதோரம் கம்மலாய் இருக்க ஆசைப்பட்டேன்.,

உன் காதோரம் இரகசியங்கள் பேசுவதற்காக!

உன் மூக்குத்தியாக இருக்க ஆசைப்பட்டேன்,

உன் மூச்சுகாற்றாவது என்மேல் படவேண்டும் என்பதற்காக!

உன் உடலில் ஆடையாக மட்டும்

இருக்க வேண்டாம் என ஆசைப்பட்டேன்.,

என் புனிதமான காதல் காமமாகிவிடக்கூடாது என்பதற்காக!





- படித்ததில் பிடித்தது -

இனிக்கின்ற விஷம் காதல்

சொல்லி வராதது காதல்.......
சொல்ல முடியாததும் காதல்.......
சுகமாய் வருவதும் காதல்.......
சுமையாய் போவதும் காதல்.......
தூக்கத்தை தொலைப்பதும் காதல்.......
எக்கத்தை வளர்ப்பதும் காதல்.......
கனவை தருவதும் காதல்.......
நினைவாய் களைப்பதும் காதல்.......
நினைத்தால் இனிப்பதும் காதல்.......
நிம்மதியை இழப்பதும் காதல்.......
காதல்!
இனிக்கின்ற விஷம்,
கலைகின்ற நிஜம்,
சுடுகின்ற தென்றல்,
குளிர்கின்ற வெப்பம்,
ஆகா மொத்தத்தில் முன்னுக்கு
முறநாய் ஆண்டவன்
கொடுத்த ஆயுள் தண்டனை!!!!!!!!!!





- படித்ததில் பிடித்தது -

உன் வளையல் ஏன் அடிகடி சிணுங்குகிறது தெரியுமா?

உன் பேரழகுகளின்மேல் நிற்க முடியாமல்
சறுக்கி விழும் துப்பட்டாவை...
சரி செய்ய உன் கைகள் செல்லும் போது...
அழகுகளை பார்க்க வளையல்களுக்குள்
சண்டை போட்டுக்கொண்டு
பெருமூச்சடைந்து சிணுங்குகிறது....
வளையலுக்கே இந்த கதி என்றால்..?





- படித்ததில் பிடித்தது -

Saturday, June 19, 2010

நிம்மதியாய் உறங்குகிறேன்..!

யாரேனும் தனக்குரிய
பொருளைத் தொலைத்து விட்டால்
நிம்மதியாய் உறங்குவார்களா..?
ஆனால் நான் உறங்குகிறேன்..!
என் மனதை தொலைத்துவிட்ட பின்பும்
நிம்மதியாய் உறங்குகிறேன்..!
ஏனெனில்…
என் மனதை உன்னிடம்தான் -
அதுவும் உரியவளிடம் தான்
தொலைத்திருக்கிறேன்
என் மன நிம்மதியோடு..!





- படித்ததில் பிடித்தது -

எப்படி நுழைந்து விட்டாய்..!!!

இமைகளை காற்று கூட

நுழைய முடியாதவாறு தான்

இறுக்கமாய் மூடியிருந்தேன்....!!?

சாமர்த்யக்காரியடி-நீ ..!!

எப்படியோ கண்ணீராய்

நுழைந்து விட்டாய்..!!!





- படித்ததில் பிடித்தது -

நீ மட்டும் தான்...!!

யாரோ சொன்னார்கள் ,
" சந்தோஷமாக இருக்கும் போது
நீ நேசிப்பவளை நினைப்பாய்...

சோகமாக இருக்கும் போது
உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ..."
என்று...
ஆனால் எனக்கோ சந்தோசமாக இருந்தாலும்

சோகமாக இருந்தாலும் ..."
என்றும் உன் நினைவு "
மட்டும் தான் ....

காரணம்.... நான் நேசிப்பவளும் நீ தான்.....
என்னை நேசிப்பவளும்

நீ மட்டும் தான்...!!





- படித்ததில் பிடித்தது -

உதாசீனப்படுத்தப்பட்ட அன்பு

உன்னால்
உதாசீனப்படுத்தப்பட்ட
எம் அன்புக்கு இன்று
மாதம் ஒன்று பூர்த்தி ஆகிறது
உன்னால் கொல்லப்பட்ட
எம் உணர்வுகளும்
உன்னால் எம் மனம் என்னும்
கல்லறையில் உயிரோடு புதைக்கப்பட்ட
எம் இதயமும் அதனுள் அடைக்கப்பட்ட
எம் உன் நினைவுகளும்…..
உயிரற்று வாழும் எம்
உடலுக்கு வாழ்த்து சொல்லி செல்கின்றன…….
எமக்காக எம் கண்கள்
ஒரு துளி கண்ணீர் சிந்தத் துடித்தாலும்
அந்த ஒரு துளியினால்
உனக்கேதும் ஆகிடுமோ என்ற பயத்தில்
எம் கன்னத்தோடு நிறுத்தி விட்டோம்
உன்னால் சிதைக்கப்பட்ட கனவுகளுடன் நாம்…….

Thursday, June 17, 2010

கண்கள் கலங்க கூடாது

என் இறப்பை கூட
உனக்கு தெரியாமல்
பார்த்துக் கொள்வேன்....!
உன் கண்கள் கலங்க கூடாது
என்பதற்காக...!





- படித்ததில் பிடித்தது -

பசுமை

என்ன தான் சுற்றிலும்

பசுமையாய் இருந்தாலும்

மனதினுள் பசுமை

இல்லையே!

அன்பே என்ன சொல்வாய்....?

நாம் கை கோர்த்து திரிந்த

கடற்கரையில்

உனக்காக காத்திருக்கிறேன்

அன்பே – நீ வந்து

தோழிலே கை போட்டு

தோழமை பகிர்வாயா?

இல்லை

மார்போடு அணைத்து

காதலை சொல்வாயா?

உறுதி

எனக்கு மரம் விட்டு
மரம் தாவ தான் தெரியும்
மனம் விட்டு
மனம் தாவ தெரியாது

Wednesday, June 16, 2010

சாத்தியமா…………….?

பசியாற பார்வை போதும்

பரிமாற வார்த்தை போதும்

காயங்கள் தானாக மாறும்

என்னோடு நீ மட்டும் வேண்டும்

சாத்தியமா…………….?





- படித்ததில் பிடித்தது -

ஏக்கத்துடன்.....

என்னுடன் பேசாமல்
இருக்க உன்னால் முடியுமா
என சோதிக்கத் தான்
இத்தனை நாள்
உன்னுடன் கதைக்காமல்
இருந்தேன் என்று கூறி
என்னுடன் கதைக்க
மாட்டாயா என்று என
ஒவ்வொரு நாளும்
காத்திருக்கிறேன்
ஏக்கத்துடன்……………….!

எப்படி மறந்தாய்

எப்படி மறந்தாய்

என்று சொல்

அன்பே

நானும் உன்னை

மறப்பதற்கு





- படித்ததில் பிடித்தது -

நேசிப்பது நிஜமா?

ஒரு உயிரை நீ நேசிப்பது

நிஜம் என்றால்

அதைப் பறவை போல்

பறக்க விடு

அது உன்னை நேசிப்பது

நிஜம் என்றால்

மீண்டும் உன்னை தேடி

வரும்





- படித்ததில் பிடித்தது -

குடை பிடித்துக் கொள்

குடை பிடித்துக் கொள்

எங்கே என் கண்ணீரால்

உன் கல் நெஞ்சம்

கரைந்து விடப் போகிறது





- படித்ததில் பிடித்தது -

Tuesday, June 15, 2010

முடியவில்லை!!



அன்றைய நாள் ஏன் உதயமானது
என்று சலித்துக் கொள்ள மட்டுமே
என்னால் முடிகிறது...
ஏனெனில் அன்று நடந்து முடிந்த
எதையுமே என்னால் சரி
செய்ய முடியவில்லை!!





- படித்ததில் பிடித்தது -

வானவில்...

காதல் என்பது வானவில் போல
அழகாக இருக்கும்
ஆனால் நிலையானது அல்ல
ஆனால்
நட்பு என்பது வானத்தை போல
அழகில்லாமல் இருக்கும்
ஆனால் நிலையானது
அதுதான் நட்பு





- படித்ததில் பிடித்தது -

கவிதை எழுதி அழுகிறேன்..

கண்ணீர் விட்டு அழுவது
பிடிக்காது உனக்கு
அதனால்தான்

கவிதை எழுதி அழுகிறேன்..
நாம் வாழுகின்ற
இந்த வாழ்க்கையில்...
காதலும், நட்பும்

இரு கவிதைகள் .
அதில்
அன்பான காதலை நேசிப்போம் ...
அழகான நட்பை சுவாசிப்போம்





- படித்ததில் பிடித்தது -

சாமர்த்யக்காரியடி-நீ ..!!

இமைகளை காற்று கூட

நுழையமுடியாதவாறு

தான்இறுக்கமாய் மூடியிருந்தேன்....!!?

சாமர்த்யக்காரியடி-நீ ..!!

எப்படியோ கண்ணீராய்

நுழைந்துவிட்டாய்..!!!





- படித்ததில் பிடித்தது -

ஞாபகமில்லை...

நான் நிம்மதியாய் துயில் கொண்ட
ஓரிரவை எண்ணிப்பார்க்கிறேன்.!
ஞாபகமில்லை...
என் எல்லா இரவுகளும்
உன் உறவு தந்த வலியை
நினைத்தே உருகி தவிப்பதால்





- படித்ததில் பிடித்தது -

எப்படியடா முடிந்தது?

என் பிம்பம் படர்ந்த உன் கண்ணில்
வேறொருவர் பிம்பம் விழக்கூடாது
என கண்களை மூடிக்கிடந்த உன்னால்
எப்படியடா முடிந்தது
நான் வசித்த உன் இதயத்தில்
வேரொருத்திக்கு இடம் தர?:





- படித்ததில் பிடித்தது -

Sunday, June 13, 2010

உனக்கே புரியும்

இன்று "நீ" வருத்தப்பட்டு கொண்டிருக்கும்

ஒரு விஷயத்தை நாளை நினைத்துப்பார் ...

அது தேவை இல்லாதது என்று

உனக்கே புரியும் ...!!!





- படித்ததில் பிடித்தது -

உன் ஒருவனுக்காக

காத்திருந்தாய் ...

என் பார்வைக்காக
பின்தொடர்ந்தாய் ..

என் காதலுக்காக
ஏற்றுக்கொண்டேன் ...

அன்புக்காக
பிரிந்து சென்றாய் ..

உன் வாழ்விற்காக
கலங்கி நிற்கிறேன்

உன் ஒருவனுக்காக





- படித்ததில் பிடித்தது -

எப்படி முடிகிறது?



றோஜாவை கேட்டேன்

முட்களின் நடுவிலும்

எப்படி உன்னால்

புன்னகைக்க முடிகிறது என்று?

பெண்கள் இல்லையா

என்றது ரோஜா





- படித்ததில் பிடித்தது -

நம்பிக்கை துரோகம்

உன்னை தானே
நம்பி கை கொடுத்தேன்
இப்படி
நம்பிக்கை துரோகம்
செய்து விட்டாயே!

பொய் சொன்னாயா?

மெய் மறந்து

பொய் சொன்னாயா

என்னை காதலிக்கிறேன் என்று…..!





- படித்ததில் பிடித்தது -

Friday, June 11, 2010

காதலும் நட்பும்!...

காதலும் நட்பும்!...

கடவுளுக்கு இரண்டு பிள்ளைகள்

அவைகளை உலகுக்காக அர்ப்பணித்தான்...!

காதலுக்கு செல்லம் அதிகம்...

ஆனால் கண்டிப்பு உண்டு...!

நட்புக்கு அன்பும் அதிகம்

எங்கும் சிறகடித்து செல்லலாம்

கட்டுப்பாடு என்பது அறவே இல்லை...!





- படித்ததில் பிடித்தது -

அழகு

சிங்கத்தில் அழகு..

ஆண் சிங்கம்!

யானைஇல் அழகு

ஆண் யானை!!

மயிலில் அழகு

ஆண் மயில்!!!

மனித இனத்தில் மட்டும் –

ஏன் பெண்கள் அழகு????.





- படித்ததில் பிடித்தது -

காதல்...! நட்பு...!

தேனாகப் பேசி தானாக விழுந்து

வீணாகப் போவது காதல்...!

தானாகப் பேசி தேனாக மாறி

நம் ஊனாக ஊறி நம்மிலே

கலந்து விடுவதுதான் நட்பு...!





- படித்ததில் பிடித்தது -

வா சண்டை போட



தொலைவில் இருந்து

பாசம் காட்ட வேண்டாம்

நீ அருகில் இருந்து
சண்டை போடு போதும்





- படித்ததில் பிடித்தது -

டயறி

உன்னை

பார்த்த நாள் முதல்,
என்னிடம்,
என் டைரி கோபித்துக்கொண்டது.
எழுத்துச்சுமை அதிகமாகிறதாம்.
என் மனச்சுமை குறைவது தெரியாமல்





- படித்ததில் பிடித்தது -

சந்தேகப்படாதீர்கள்



உண்மை நண்பனிடமோ , நண்பியிடமோ

எவ்வளவு வேண்டுமானாலும்

"கோவப்படுங்கள் "

ஆனால் ஒரு நிமிடம் கூட

"சந்தேகப்படாதீர்கள்" ...

அது உங்கள் நட்பையே அழித்து விடும்.......





- படித்ததில் பிடித்தது -

Thursday, June 10, 2010

உன் கைகள்



எனக்கு வலிக்கும் என்று

நீ பற்றாமல் போன

என் கைகள்

இன்னும் தொலைந்து போகாமல்

உன் கைக்குள்ளேயே இருக்கின்றது

இனிமேலாவது பற்றிக் கொள்வாயா?

அல்லது

வலிக்கும் என்பாயா?





- படித்ததில் பிடித்தது -

பாசம்

நீ விரும்பிய இதயத்தை

உன்னால்

வெறுக்க முடியாது

அந்த இதயத்தை தவிர

உன்னை எவரும்

அழ வைக்க முடியாது

ஆனாலும் – நீ

நேசித்தது நிஜம் என்றால்

அந்த அன்புக்காக

காத்திரு

உன்னிடம் அந்த பாசம்

தேடி வரும்





- படித்ததில் பிடித்தது -

நினைவு

என் காதல் செடிக்கு

கவிதை ஊட்டி வளா்த்தேன்

மரத்துப்போனது அவன் இதயம்

மறக்காமல் போனது அவன் நினைவு

என் காதல்

மெழுகாய் நான்

திரியாய் என் காதல்

தீயாய் எரிவது

நான் மட்டும் இல்லை

என்னுள் இருக்கும்

நீயும் தான்





- படித்ததில் பிடித்தது -

எனது விருப்பம்

நான் விரும்பிய அனைத்தும்

தொலைவிலேயே இருக்கின்றன

அன்று நிலவு

இன்று நீ





- படித்ததில் பிடித்தது -