Monday, August 23, 2010

ஓர் எதிரி இல்லையே!

எதிர்பாராதது தான்

நாம் நம்மை
இவ்வளவு எளிதாக
புரிந்து கொண்டது.
எனக்குள்ள கவலை
ஓர் எதிரி இல்லையே
நம்மை இன்னும் நெருக்கமாக்க!





- படித்ததில் பிடித்தது -

மவுனம் ஏன்?

காற்றுக்குக் கோபம் வந்தால்
"சூறாவளி"
கடலுக்குக் கோபம் வந்தால்
"கொந்தளிப்பு"
பூமிக்குக் கோபம் வந்தால்
"பூகம்பம்"
உனக்கு மட்டும் கோபம் வந்தால்
மவுனம் ஏன்?





- படித்ததில் பிடித்தது -

அவளுக்கு பிடிக்கும் என்றால்

உடைப்பது அவளுக்கு
பிடிக்கும் என்றால்

நான் தருவேன்
என் என்னொரு இதயம்





- படித்ததில் பிடித்தது -

Sunday, August 1, 2010

பெண்ணே!

பெண்ணே
நீ மௌன விரதம் இருந்தால்
முதலில் உன்
கண்களை மூடிக்கொள்
உன் உதடுகளை விட
உன் கண்கள் தான்
அதிகம் பேசுகின்றன.





- படித்ததில் பிடித்தது -

நட்சத்திரப் பூக்கள்!

விதவையர் கண்ணில்பட்டால்

ஏங்கியழக் கூடுமென்று

எட்டாத உயரத்தில்

பூத்துக் கிடக்கின்றன

நட்சத்திரப் பூக்கள்





- படித்ததில் பிடித்தது -