Friday, December 31, 2010

அன்பே சென்று வா

அன்பே!
இன்றோடு நீ
என்னை விட்டு சென்றாலும்
நீ விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் என் மனதிலே...!

நீ தந்த காயங்கள்
நெஞ்சோடு இருந்தாலும்
நினைத்துப் பார்க்கையில்
என்றும் இனிமையே!

உன்னாலே கிடைத்த
உறவுகள் ஆயிரம்
உயிரோட்டமான வாழ்க்கையின்
உயிருள்ள ஓவியங்கள்

சென்று வா அன்பே
உன் நினைவுகளுடன்
உனதன்பு உறவோடு
இன்னும் வாழ்வேன்..........!

Thursday, December 30, 2010

நண்பர்களுடன் வாழ்வோம்


உன் முகம் பார்க்கும்
ஒவ்வொரு நிமிடமும்
உற்சாகமுள்ள
நாளிகைகளாக.....!

உனக்காக வாழும்
ஒவ்வொரு கணங்களும்
உயிரோட்டமுள்ள
வாழ்க்கை பக்கங்களாக....!

உன்னோடு பேசும்
ஒவ்வொரு நொடியும்
உண்மை அன்புக்கான
உயிர்ப் பூக்களாக...!

உண்மை நட்புகளுடன்
உயிர் மூச்சுள்ள வரை
ஒன்று கூடி வாழ்வதே
வாழ்வின் உண்மை வெற்றி

நண்பர்களுடன் வாழ்வோம்
நட்பை நேசிப்போம்
நாளும் இன்ப வெள்ளத்தில்
நனைந்தே மகிழ்ந்திடுவோம்.

Tuesday, December 28, 2010

முகாரி ராகமாய்.......!

முகவரி தொலைந்த
முகாரி ராகமாய்
முகம் தெரியா நம் நட்பு
முடிந்து விடும்
என்று பயந்தேன்

சரணம் பாடி
மங்களம் சொல்லாது
பைரவி பாடி
பல்லவி ஆக்கிவிட்டாய்
இனி நம் வானம்
என்றும் அனுபல்லவியே!

இனிய நட்பா?

உன் நட்பை

காதல் செய்தேன்

கவிதை வரவில்லை

கை கோர்த்து திரிந்தேன்

சஞ்சலம் வரவில்லை


தோளிலே சாய்ந்தேன்

தோழமை துளிர்த்தது

மனம் விட்டு பேசினேன்

சோகமெல்லாம் மறைந்தது


எனைவிட்டு பிரிந்தாய்

இதயமே நொறுங்கியது

குதூகலம் தொலைந்தது

வாழ்க்கையே புரியாமல்

கண்கள் பனித்தது


இதை எப்படி சொல்வது

இனி உனக்கு அன்பே

இதற்கு பெயர் தான்

இனிய நட்பா?

Monday, December 27, 2010

நித்தமும் நீ வேண்டும்

அன்று நம் வானம்
ஆயிரம் விண்மீன்கள்
பூத்துக் குலுங்கிய
அழகிய நந்தவனம்
ஆசை உள்ளங்களான
அன்றில் பறவைகளின்
அன்புக் கூடு அது

அலையடிக்கும்
புயல் வீசும் - ஆனால்
நாணற் புட்களாய்
வளைந்து கொடுக்கும்
அன்பு உள்ளங்கள்

கைகோர்த்து கதை பேசி
சிறு சண்டை புரிந்து
சின்னதாய் சீண்டி
சிறு ஊடல் கொண்ட
சினேகமான நினைவுகள்

நினைத்துப் பார்க்கையில்
நெஞ்சமெல்லாம் ஆனந்தம்
நினைவுகளை நிரந்தரமாய்
தந்துவிட்டு செல்லாதே!
நித்தமும் நீ வேண்டும்
சிறு சண்டை நான் போட!

நட்பு நிசப்தமான உறவா?

நட்புக்காக

நட்பை விலத்தும்

நட்பே

நட்பு என்ன

நினைவுகள் அற்ற

நிசப்தமான உறவா


காதலை விட

கண்ணியம் நிறைந்த

கற்பு கூடிய விடயம்

நட்புக்காக

காதலை துறந்தவர் உண்டு


நீயோ

புரிந்துணர்வற்ற நட்புற்காய்

உண்மை நட்பை

விலக்குகிறாய்


நட்பு இல்லயேல்

நாளிகை கூட

வாழ முடியாத நீ

இதயத்தை கல்லாக்கி

எப்படி வாழ்கிறாய்


உன் நாடித்துடிப்பே

அடங்கிவிடும்

இப்படியே நீ

இருப்பாய் என்றால்

இதை கூட புரியாமலா நீ

Sunday, December 26, 2010

சிறிதாய் ஓர் சந்தேகம்

சின்னஞ்சிறு வயது முதல்

சினேகமாய் கைகோர்த்து

சிறுகதைகள் பேசி

செல்லமாக சீண்டிய

என் இனிய நட்புறவே

இன்று எங்கு சென்றது

உன் சினேகமும்

இத்தனை நாள் புரிந்துணர்வும்?


நண்பனில் தவறு கண்டால்

நல்லுரை கூறித் தீர்க்கலாம்

ஆனால்

நட்பிலே தவறு கண்டால்

எவ்வுரை கூறித் தீர்ப்பது?


இன்பமோ துன்பமோ

அருகிருந்து அரவணைத்து

ஆறுதல் சொல்பவனே

உண்மை நட்பென்று

இத்தனை நாள்

அர்த்தம் கொண்டேன்


இன்று தான் புரிந்தது

நட்பாலும் பல

காயங்கள் கொடுத்து

ரணமாக்க முடியும் என்று

கூட பழகியவளையே

புரிந்து கொள்ளாத

நீயும் என் நட்பா?

சிறிதாய் ஓர் சந்தேகம்

முளைவிட்டது என் மனதில்!

Saturday, December 25, 2010

உறவுகளை தொலைத்த உள்ளங்கள் சார்பாக.........!

மண்ணை வந்து

முத்தமிட முன்னர்

கருவிலயே

காலனிடம் சென்ற

பிஞ்சு நெஞ்சங்கள்


தம் பாலகர்களின்

இனிய கனவுகளை

நெஞ்சிலே சுமந்து

மார்போடு அணைத்த

பெற்ற உள்ளங்கள்


வாழ்க்கைப் பாதையில்

வாழ்வதற்கு இணைந்து

துணைகளை தொலைத்து

வாழ்க்கையை இழந்த

இளம் ஜோடிகள்


இதயங்களை பரிமாறி

இனிமையான கதைகள் பேசி

இனிய ஆசைளை

இதயத்தில் சுமந்த

காதல் ஜோடிகள்


உணர்வுகளை புரிந்து

உரிமையோடு பழகி

ஒன்றாக உணவருந்தி

கை கோர்த்து திரிந்த

நட்பு உள்ளங்கள்


தள்ளாத வயதினில்

தன் உற்ற துணையை

தயவென எண்ணி

தன்னம்பிக்கையுடன் இருந்த

நம் முதியோர்கள்


இத்தனை பேர்களின்

கனவுகளை காவு கொண்ட

இயற்கை அன்னையே

உனக்குப் பேர் தான்

சுனாமியாம்.........!


இன்றைய நாளிலே

உன் தாகத்திற்கு பலியான

அன்பு உள்ளங்களிற்கு

அஞ்சலி கூறுகிறோம்

உறவுகளை தொலைத்த

உள்ளங்கள் சார்பாக.........!

Friday, December 24, 2010

பொக்கிஷம் நீ

கருவறையிலிருந்து இறங்கி
கல்லறை வரை
நடந்து போகும் தூரம் தான்
வாழ்க்கை
அந்த வாழ்க்கையில்
எனக்கு கிடைத்த
பொக்கிஷம் நீ
எதற்காகவும் உன்னை
இழக்க நான் தயாரில்லை

இனிய நத்தார் வாழ்த்து

இறைவனுக்கே பிறந்த நாள்
எம் யேசு பாலன் பிறந்த நாள்
அனைவரும் மகிழ்ந்திடுவோம்
அன்பாக வாழ்த்திடுவோம்
ஏழைக்குடிலில் பிறந்து
எமக்காக சிலுவை சுமந்து
இன்னல்களை தாங்கிய
இனியவனை வாழ்த்திடுவோம்

Wish your Happy Christmas to all.

Thursday, December 23, 2010

நட்பிற்கு பிறந்த நாள்

தோழியே!
உணர்வோடு கலந்து
உயிரோடு உறவாடும்
உண்மையான நம் நட்பிற்கு
இன்று பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கூற என்னிடம்
வார்த்தைகள் கிடைக்கவில்லை

நம் நட்பின் பரிசாக
நமக்குக் கிடைத்த
நம் நட்புக் குழந்தை
இன்று நம்முடன் இல்லை
இருந்தும் நம் நட்பு
நன்றாகவே தொடர்கிறது

நம் உதிரத்தில்
நாடித்துடிப்பு வரை
நாம் வாழ்வோம்
நம் உண்மை நட்பிற்காய்
நமது நட்பிற்கு
நூற்றாண்டு வயது கண்டு
நாம் வாழ்வோம்
இவ் வையகத்திலே...
இனிய நண்பர்களாக
கைகோர்த்து...............!

ஓமத்து நெருப்பைப்போல........

குழல் எங்கும் பூச்சூடி

வதனமதில் பொட்டிட்டு..

மங்களமாய் உடை உடுத்தி..

மணமகளாய் தலை குனிந்து

அமர்ந்து இருக்கும் மணப்பெண்ணின்

மனதில் இருக்கும்

எத்தனை ஆசைகள் காயங்கள்

உள்ளத்து காதல் எல்லாமே..

எரிகின்றன.

அவள் முன் எரிந்து கொண்டிருக்கும்

ஓமத்து நெருப்பை போல



எழுதியவர் - மிருணன்

Monday, December 20, 2010

உன் புரிந்துணர்வு எங்கே?

அன்பே!
இத்தனை நாட்களாய்
என்னை புரிந்த உன்னால்
இன்று மட்டும் எப்படி
என் உணர்வுகளை
கொன்று விட்டு
என் வாழ்வின்
இலட்சியங்களுக்கு
முற்றுப்புள்ளி
போட முடிந்தது?

தோழியே மன்னித்து விடு!

தோழியே!
நீ என் அருகில் இருக்கையில்
நான் படும் காயமெல்லாம்
தானாய் ஆறி விடும்
என் காயங்கள் எல்லாம்
மாயமாகிவிடும்
ஆயினும்
உன் இதயம் காயம் கொண்டு
உன் கண்ணில் கண்ணீர் கண்டால்
தோழியே என்னை மன்னித்து விடு
கண்ணீர் காணும் முன்னால்
உன் காயத்தை என்னால்
ஆற்ற முடியவில்லையே........!



எழுதியவர் - மிருணன்

Friday, December 17, 2010

நண்பர்களே போதும்....!

இறைவனிடம் வரங்கள்

பல கேட்டேன்
கிடைக்கவில்லை
நான் கேட்காமலே
கிடைத்த வரம் தான்
என் நண்பர்கள்
இனி எனக்கு எந்த
வரங்களுமே வேண்டாம்



எழுதியவர் - மிருணன்

நான் மட்டும் விதிவிலக்கா?

பெண்ணே!
நீ சாலையோரம் நடந்து போகையில்
உன் கை பட்டு
பூத்த பூக்களைப் போல
உன் விழி பட்டு
என் இதயப் பூவையும் மலர வைத்தாய்
எனக்கே தெரியாத அதிசயங்களை
எனக்குள்ளே நடக்க வைத்தாய்
எனது கிறுக்கல் எல்லாம்
கவிதையானது
எனது பேச்சுக்கள் எல்லாம்
பேச்சு இழந்து போனது
ஒவ்வொரு நொடிகளும்
உன்னை பார்க்க அடம் பிடிக்கையில்
உன்னை காதல் கொள்ளாமல் இருக்க
நான் மட்டும் விதிவிலக்கா?



எழுதியவர் - மிருணன்