Thursday, December 2, 2010

என்னுடைய தெரிவு

நான்
உன்னை நேசிப்பதை விட
உன்னால் நான் நேசிக்கப்படும் போது தான்
நேசத்தின் தார்ப்பரியம் புரியப்படுகிறது
நேசிப்பின் ஆழம் உணரப்படுகின்றது
கர்வம் மேலோங்குகிறது
பணத்தாலோ
உன் பதவியாலோ
நீ
என்னை கவர்நது விடவில்லை
உனது பண்பால்
என்னுள் உயர்ந்து நிக்கின்றாய்
மதம் வேறு
செய்கை வேறு
ஆனால்
என்னுள்
உணர்வொன்றிப் போய் விட்ட
சாதாரணமானவன் நீ

காதலுக்கு அடித்தளம்
அழகோ
இளமையோ இல்லை
புரிந்துணர்வு,
விட்டுக் கொடுப்பு
மனித நேயம்

இவை
உன்னிடத்தில்

இருப்பதால் தான்
நண்பனே!
இந்த கணப்பொழுது வரை
உன்னை நான் காதலிக்கிறேன்



எழுதியவர் - குகநிதி

No comments:

Post a Comment