Monday, September 20, 2010

உன்னாலா?

உன்னை காதலித்ததால்
தான் என்னவோ
உன் பாதி ஒளியாகவும்
என் பாதி இருளாகவும்

உனக்காக

என் இதயத்தில்

காதல் சுடரை

ஏற்றி வைத்திருக்கிறேன்

உருகி முடிவதற்குள்

வந்து அணைத்துக் கொள்வாயா?

நடிக்காதே

நான் உயிருடன்

இருந்த போது ஏற்காது

இன்று எதற்காக கதறுகிறாய்

என் கல்லறையில்

என்னையும் தான்

அந்தி சாயும் நேரம்

அஸ்தமித்துப் போவது

சூரியன் மட்டுமில்லை

உன் மேல் நான் கொண்ட

என் காதலும் தான்

இப்படியா?

உனக்கு நான் அனுப்பிய

ஒவ்வொரு ரோஜாவையும்

என் மரணத்திற்கு

மலர்வளையம் செய்ய தான்

சேகரிக்கிறாய் என்றது

அன்று எனக்கு தெரியாமல்

போய் விட்டது.

என்றும் உன் நினைவில்

உன்னை பற்றி நினைப்பதற்கு

இரவென்ன பகலென்ன?

என்றும் என் நினைவில் நீ

ஆனால் உன் நினைவோ……………!





- படித்ததில் பிடித்தது -