Saturday, October 30, 2010

மனசு வருமா?

உனக்காக சீட்டெடுக்க
மறுக்கிறது கிளி
உன்னை பார்த்தாலே
யாருக்கு தான்
பொய் சொல்ல
மனசு வரும்?
அன்பே உன் பிஞ்சு முகத்தை
பார்த்துக்கொண்டே இருக்கலாம்
ஆயுளின் இறுதி மூச்சு வரை.....ஞ

ஆருயிர் நண்பர்களாக..........!

என் சோகத்தில் தோள் கொடுத்து
இன்பத்தில் பூரித்திருக்கும்
என் இனிய நண்பனே!
நாம் கை கோத்து நடக்கும் போதும்
சிரித்துப் பேசி மகிழும் போதும்
எத்தனை கண்கள் தான்
நம்மை நண்பர்களாக பாக்கும்............?
ஆயிரம் உறவுகள் நம்மை
ஆழமாக பார்த்தாலும்
ஆயுளுக்கும் நாம் வாழ்வோம்
ஆருயிர் நண்பர்களாக..........!

Friday, October 29, 2010

உனக்கோர் அன்பு மடல்

அன்பே!
தினமும் உனக்காகவே துடிக்கும்
என் இதயம்
இன்று கனமாக இருக்கிறது
உனக்காக துடிக்கவேண்டாம் என்ற
உன் கட்டளையால்
அதனால் தான் அன்பே
அனுப்புகிறேன் அன்பு மடல்
மாற்றிவிடு உன் முடிவை
தேற்றிவிடு என் இதயத்தை...!






- படித்ததில் பிடித்தது -

Thursday, October 28, 2010

உனக்காக சில துளிகள்.............!

நட்பே!
உனக்காக சில துளிகள்
என் விழிகளில் காத்திருக்கிறது
மறுபடியும் நாம் சந்திக்கையில்
என் விழிகளை பார்த்து விடாதே!
தேக்கி வைத்திருக்கும் சோகங்கள்
உன்னை கண்டதும்
என்னைத் தீண்டுவது மட்டுமில்லாது
உன்னையும் காயப்படுத்திவிடும்

என் செல்ல உயிர் கொல்லியே...!

உனக்கு அடித்து அடித்து என்...
'தொலைபேசி SMS' எடை
அதிகரிக்க அதிகரிக்க....
உன் பதில் கிடைக்காத உயிர் வலியால்..
என்னுடைய எடை
குறைந்து கொண்டே போகிறது....!!

Wednesday, October 27, 2010

புரிந்து கொள் இனியவளே........!

அன்பே - உன்
சிரிப்பை
ரசித்து இருக்கிறேன்
சீண்டலில்
ஸ்பரிசித்து இருக்கிறேன்
அன்பில்
நனைந்து இருக்கிறேன்
அரவணைப்பில்
நெகிழ்ந்து இருக்கிறேன்
ஆனால்
உன் மௌனத்தில் மட்டும்
எதுவுமே புரியாது
தடுமாறுகிறேன்............!
புரிந்து கொள் இனியவளே........!

Monday, October 25, 2010

வெற்றியின் மறுபக்கம்

மனதை
திறந்து வைத்திடாதே
எவனாவது வந்து
புகுந்து கொள்வான்
மனதை
விரித்து வைத்திடாதே
எவனாவது வந்து
அமர்ந்து கொள்வான்
மனதை
ஈரமாய் வைத்துவிடாதே
எவனாவது வந்து
ஒட்டிக் கொள்வான்
மனதை
உலர வைத்துவிடாதே
எவனாவது வந்து
உடுத்திக் கொள்வான்......!



எழுதியவர் - மு.மேத்தா

வருந்தவில்லை நான்...

இப்போது கூட - நீ
பிரிந்து போனதைப்பற்றி
வருந்தவில்லை நான்...
அளவுக்கு மீறிச்
செல்லம் கொடுத்து
என்னை கெடுத்து விட்டு
போய் விட்டாயே
என்பது தான் என் வருத்தம்!


எழுதியவர் - மு.மேத்தா

உன் ஞாபகங்கள்..............

ஊரெல்லாம் உறக்கத்தில்
தூங்காமல் நான்...
தூங்க விடாமல் நீ!
வாசல் கதவு ஜன்னல் கதவு
அனைத்தையும்
பூட்டிவிட்டுத் தானே படுத்தேன்
அப்படியும் உள்ளே புகுந்து
உதைக்கின்றன
உன் ஞாபகங்கள்..............





எழுதியவர் - மு.மேத்தா

Sunday, October 24, 2010

பருவத்தின் மாற்றம்......

அன்று
அறியாத பருவத்தில்
புரியாத கதை பேசி
மகிழ்வாக கைகோர்த்திருந்தோம்
இன்று
வாழ்க்கையின் அர்த்தங்கள்
புரிந்த வயதில்
நாம் பேச நினைத்தும்
வார்த்தைகள் இன்றி
தடுமாறுகின்றோம்....!

நம் காதல் எங்கே..........?

அன்பே!
நாம் காதல் மொழி பேசி
கனிவாக திரிந்த போது
நமக்கு நட்பாக இருந்த
இந்த நாய்க்குட்டிக்கு
இருக்கும் பாசம் கூட
என் காதலி உனக்கு
இல்லாது போனது ஏனோ....?
என் மணவாழ்க்கையில் தான்
உன்னை பகிர விரும்பாத நீ
என் கல்லறையிலாவது
காணிக்கை செலுத்தி இருக்கலாமே
என் உண்மைக் காதலை!

Saturday, October 23, 2010

எட்டா கனிகளாய்...............!

பாசத்தை பார்த்தவர்கள்
பவனியில் குறைந்து வர
பணத்தை பார்ப்பவர்கள்
பல கோடியாய் உயர்ந்து வர
பாசங்கள் மட்டுமல்ல
பந்தங்கள் கூட
எட்டா கனிகளாய் இங்கு...............!

Thursday, October 21, 2010

அன்றும் இன்றும் நீ

அன்று நீ என் கையை பிடித்த போது
உடைந்த வளையல்களை
இன்னும் பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறேன்............!
ஆனால் இன்று நீ
என் இதயத்தையே
உடைத்து விட்டு போகிறாய்
என்ன செய்ய என் அன்பே...!

Tuesday, October 19, 2010

உண்மை நட்பை நேசி.............!

உயர்ந்து பார் வாழ்க்கையில்
உற்சாக படுத்துவான் தோழன்
உண்மை அன்போடு
தோள் தட்டுவான்
ஆனால்
உன் உயர்ச்சி கண்டால்
உறவுகள் கேட்கும்
ஓராயிரம் கேள்வி
உன் வாழ்கைப் படிகளை
ஏறுவரிசைப் படுத்தும்
உறவுகளை காட்டிலும்
உண்மை நட்பை நேசி
உயர்ச்சி நிச்சயம்.

Sunday, October 17, 2010

எனக்கு உயிர்

எனக்கு உயிர் போனால்

உனக்கு அழுகை
வருமோ தெரியாது........!
உனக்கு அழுகை வந்தாலே
எனக்கு உயிர் போய் விடும்





- படித்ததில் பிடித்தது -

பட்டாம் பூச்சியாய்......!

இங்கு
பட்டாம் பூச்சியாய்
இரண்டு உயிர்கள்
உறவு என்ன என்று
தெரியாமலே.......!
கை கோத்து பறக்கிறது

Saturday, October 16, 2010

நீ கூண்டுக்கிளியா?

அன்பே!
நீ கூண்டுக்குள் அடைந்திருக்கும்
கூண்டுக்கிளியா? - இல்லை
கூண்டை விட்டு வர தயங்கும்
பச்சைக்கிளியா?
பொறுத்தது போதும்
வெளியேற துணை நிக்கிறேன்
கூட வருவாயா?

Friday, October 15, 2010

என் அன்புத் தோழியாக...........!

உறவுகள் பல இழந்து நான்
தனிமரமாக தவித்த போது
நினைத்தேன் இனி எந்த
உறவுகளும் என் மனதில்
இடமில்லை என்று
என் எண்ணங்களை
தகர்த்தெறிந்தாய் நீ
என் அன்புத் தோழியாக...........!

கொட்டிடும் மழைத் துளியில்...............

கார்மேக கூட்டங்கள்
கருக்கொண்டு எழுந்தால்
காரிகையாள் இவளிற்கு
கட்டில்லா ஆனந்தம்
காரணம்
கொட்டிடும் மழைத் துளியில்
கனிவுள்ளோர் காணாவண்ணம்
கண்ணீரை கொட்டிட
காத்திருக்கும் சந்தர்ப்பம்
இவள்
மழையை ரசிப்பது
மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல
மனச்சுமயை இறக்கவுமே.....!

Thursday, October 14, 2010

ஏன் இந்த ஈரம்..............?

மரணத்தை

பக்கத்தில் பார்த்தும்
கலங்கவில்லை என் கண்கள்
உன் சோகத்தைக் கண்டதும்
என் கண்களில்
ஏன் இந்த ஈரம்
மழை பட்ட நிலம் போல........!



எழுதியவர் - மிருணன்

சாகாத நினைவுகள்

நினைவுக்கு மட்டும்

சாவு இருந்தால்

எந்தப் பிரச்சினையும் இல்லை

சாகாத நினைவுகள் தான்

நம்மை கொஞ்சம் கொஞ்சமாய்
சாகடிக்கும்



எழுதியவர் - மிருணன்

அபிஷேகம்........!

ஒரு நாள் - நீ
ஆசையாக கேட்ட ரோஜாவை
பறித்து தர தவறி விட்டேன் - இன்று
தினம் தினம் ரோஜாக்களால்
அபிஷேகம் செய்கிறேன் - ஆனால்
நீயோ சூடிக் கொள்ள மறுக்கிறாய்

Wednesday, October 13, 2010

உன் எண்ணங்கள்

பசுமை நிறைந்த
தெளிந்த நீரோடைபோல்
இருந்த என் மனதில்
உன் எண்ணங்கள்
கொட்டும் அருவியாக வந்து
சில்மிசம் செய்கிறது

Tuesday, October 12, 2010

கவலைப்படாதே!

சுட்ட புல்லாங்குழல் தான்

சுதி சேரும்
கவலைப்படாதே!
நீ
சுடப்பட்டு கொண்டிருக்கிறாய்





- படித்ததில் பிடித்தது -

விடியலைத் தேடி

அன்பே!
நாம் விடியலுக்காய்
காத்திருந்தது போதும்!
எழுந்து வா
செல்வோம் நம்
விடியலைத் தேடி
எம் வாழ்க்கை பாதையில்......

Friday, October 8, 2010

பிரிவு ரணம்

பிரிவுகள் கூட
சுகமானவை என்று
பிரியும் முன் நினைத்தேன்
ஆனால்
இப்போ தான் புரிகிறது
பிரிவு இத்தனை
ரணமானது என்று.........!

நீ அதிஷ்டம் கூடியவன்

அன்பே!
நீ அதிஷ்டம் கூடியவன்
ஏன் தெரியுமா?
உன்னை விட அதிகமாக
என் மனதுக்குப் பிடித்தவள்
என்னைப் போன்றே
பெண்ணாக இருப்பதால்

ஆறாத வடு

அன்பே! - நீ
தீ என்று தெரிந்தும்
தீண்டி பார்க்க துடித்தது
எம் இதயம்
தொட்ட பின் தான்
தெரிந்தது
சுட்டது மட்டுமல்ல
ஆறாத வடுவும்
சேர்ந்தே வந்ததை........!

Thursday, October 7, 2010

வாழ்க்கை

தோல்வியே அடையாத

ஒருவன் இதுவரை
இருந்ததில்லை
தோல்வியோடு மட்டுமே
ஒருவன் இதுவரை
இருந்ததில்லை





- படித்ததில் பிடித்தது -

அழிக்க முடியாத பிணைப்பு

உறவு சொல்ல நமக்குள்
ரத்த சொந்தமும் இல்லை
உரிமை சொல்ல நமக்குள்
எந்த பந்தமும் இல்லை
ஆனால்
நமக்குள் இருக்கிறது
அழிக்க முடியாத பிணைப்பு
அது தான் நம் நட்பு

அன்று.............. இன்று!

அன்று
பலநாட்கள் பழகி இருந்தும்
பேசுவதற்கு வார்த்தை
இருக்கவில்லை
ஒரே நாளில்
இணைந்து கொண்டோம்
இன்று
பழக சந்தர்ப்பம் இல்லாவிட்டாலும்
பேசாமல் இருக்க முடியவில்லை

Tuesday, October 5, 2010

மழையில் நனையாதே

அன்பே
இனி நீ மழையில் நனையாதே
நான் மட்டும் தொட்டு
அனுபவிக்க இருக்கும்
உன் உடலை
மழை நீர் களவாடுகிறது.

பூப்போல

அன்பே!
நீ
பூக்களில் ஆடை போட்டு
என்ன பயன்
உன் மனது
பூப் போல இல்லையே!