
இனியவளே!
உன்னை
பார்த்த நொடி முதல்
ஆயிரம் ஆசைகள்
அத்தனையும் உனக்காய்
அன்பு வரிகளில்!
குழந்தையாய் உன்னோடு
குதூகலித்திட ஆசை
கொட்டும் அருவியில்
குளித்திட ஆசை!
மாலை பொழுதிலே
மடிசாய ஆசை
மட்டில்லா மகிழ்ச்சியில்
திழைத்திட ஆசை
கடற்கரை மணலிலே
கைகோர்த்திட ஆசை
கானல் நீரெல்லாம்
நிஜமாக ஆசை
நிலவின் ஒளியில்
நின் முகம் காண ஆசை
நட்சத்திரங்களை எண்ணி
முத்தமிட ஆசை
தோழமை கொண்டு
தோள் சாய ஆசை
தோன்றிய கனவுகள்
நனவாகிட ஆசை
எத்தனையோ ஆசைகள்
எண்ணத்தில் தோன்றிட
அத்தனையையும் உள்ளத்தில்
ஆசையாய் அடக்கினேன்
அன்பே உன்னை
கைபிடிக்கும் நாளிலே
மொத்தமாய் உன்னில்
முழுமையாய் சரணடைவேன்
No comments:
Post a Comment