
இரட்டை சகோதரராய்
கைகோர்த்து கதை பேசி
இறுமாப்புடன் நின்று
ஆயிரம் உறவுகளை
அன்போடு எம்மில் தாங்கி
களிப்புடன் இருந்த நம்மை
காலனவன் வந்து
நொடி கூட இரக்கமின்றி
நொருக்கி விட்டு சென்று விட்டான்
நாம் உலகை விட்டு
தொலைதூரம் பிரிந்து சென்று
இன்றோடு முழுமையாக
பத்தான்று பறந்தாலும்
எம்மை நினைவு கூற என
எத்தனையோ உள்ளங்கள்
இன்றும் இவ்வுலகில்
வாழ்ந்து கொண்டு உள்ளன.
உலகையே உலுக்கி நிற்கும்
எம் இருவரின் அழிவும்
மூவாயிரத்திற்கும் மேலான
மனிதர்களின் இறப்பும் கூட
தீவிரவாதத்தை அழிக்கவில்லை
நம் அழிவில் கூட இந்த
நானிலம் திருந்த வில்லை
எம் அழிவுக்கு அரசு இட்ட பெயர்
செப்ரெம்பர் 11 தாக்குதல் என
செத்தும் வாழ்கிறோம் பலர் மனங்களில்
எம்முள் வாழ்ந்த காரணத்தால்
எம்மோடு சேர்ந்திங்கு
எமனால் குடிக்கப்பட்ட
அத்தனை உறவுகளின்
ஆன்மா சாந்தியடைந்து
அமைதி பெற அந்த
ஆண்டவனை வேண்டுகிறோம்
இனியாவது இவ் உலகில்
தீவிரவாதம் ஒழிந்திட
பிரார்த்திப்போம்!



ஓ பயங்கரவாதமே உனக்கொரு மரணம் வராதா...?
ReplyDeleteநன்றி நண்பர் MANO நாஞ்சில் மனோ
ReplyDelete