Sunday, September 25, 2011

முயற்சிக்கவில்லை

விடை தெரியா வினாவாக
ஆயிரம் கேள்விகள்
விடைபெற நினைக்கையில்
விழிகளில் சங்கடம்
பிரிவுகளை எண்ணி
பிழிகிறது மனது
மௌனங்களை இங்கு
மொழி பெயர்க்க ஆசை
இருந்தும் முயற்சிக்கவில்லை
சோகத்தின் வாசலை
மொழிபெயர்த்து அறிவதில்
ஏன் தான் ஆர்வம் என!

No comments:

Post a Comment