Saturday, September 10, 2011

செப்ரெம்பர் 11



இரட்டை சகோதரராய்

கைகோர்த்து கதை பேசி

இறுமாப்புடன் நின்று

ஆயிரம் உறவுகளை

அன்போடு எம்மில் தாங்கி

களிப்புடன் இருந்த நம்மை

காலனவன் வந்து

நொடி கூட இரக்கமின்றி

நொருக்கி விட்டு சென்று விட்டான்



நாம் உலகை விட்டு

தொலைதூரம் பிரிந்து சென்று

இன்றோடு முழுமையாக

பத்தான்று பறந்தாலும்

எம்மை நினைவு கூற என

எத்தனையோ உள்ளங்கள்

இன்றும் இவ்வுலகில்

வாழ்ந்து கொண்டு உள்ளன.


உலகையே உலுக்கி நிற்கும்

எம் இருவரின் அழிவும்

மூவாயிரத்திற்கும் மேலான

மனிதர்களின் இறப்பும் கூட

தீவிரவாதத்தை அழிக்கவில்லை

நம் அழிவில் கூட இந்த

நானிலம் திருந்த வில்லை

எம் அழிவுக்கு அரசு இட்ட பெயர்

செப்ரெம்பர் 11 தாக்குதல் என

செத்தும் வாழ்கிறோம் பலர் மனங்களில்



எம்முள் வாழ்ந்த காரணத்தால்

எம்மோடு சேர்ந்திங்கு

எமனால் குடிக்கப்பட்ட

அத்தனை உறவுகளின்

ஆன்மா சாந்தியடைந்து

அமைதி பெற அந்த

ஆண்டவனை வேண்டுகிறோம்

இனியாவது இவ் உலகில்

தீவிரவாதம் ஒழிந்திட

பிரார்த்திப்போம்!

2 comments:

  1. ஓ பயங்கரவாதமே உனக்கொரு மரணம் வராதா...?

    ReplyDelete
  2. நன்றி நண்பர் MANO நாஞ்சில் மனோ

    ReplyDelete