Thursday, November 11, 2010

ஏனடி இன்னும் தயக்கம்?

பட்ட மரம் தளிர்ப்பதுண்டு
தேய்ந்த நிலா வளர்வதுண்டு
மறைந்த சூரியன் எழுவதுண்டு
வற்றிய குட்டை நிறைவதுண்டு
பாலைவனத்திலும் மரங்களுண்டு
அன்பே நீ மட்டும் ஏன்
உன்னை விட்ட காதலை எண்ணி
புதிய உறவை ஏற்க தயங்குகிறாய்?
உன் பாலைவனத்தை
பசுமையாக்குவதில்
ஏனடி இன்னும் தயக்கம்?

No comments:

Post a Comment