Monday, November 8, 2010

எப்போதும் இப்படித்தான்......!

ஓடும் ரயிலின்
இருக்கைகள்
எப்போதும் அதே பக்கமே
எங்கள் பயணப் பாதைகள் தான்
இப்போது மறுபக்கம்
அடம் பிடிக்காதே....
நீ பின்னோக்கியே
சென்றாக வேண்டும்...
உன் பதிவிலக்க இருக்கை
இதுவே தான்
இரும்பினை நம்பிய
இனிய பயணம்
இரு கோடுகள் தொடுக்கும்
புதிய பயணம்
நீ மட்டும் அடம்பிடிக்காதே
உன் பயணம் மட்டும்
உன் ஊரில் முடியும் - எனை
சந்திக்காது போனால் - நீ
சஞ்சலம் கொள்ளாதே
என்
பதிவிலக்க இருக்கையோ....
தொலை தூரப் பெட்டியில்........!

No comments:

Post a Comment