Wednesday, November 10, 2010

ஏகாதிபத்தியத்தியம்

பழமரம் ஒன்றைப் பார்த்தால்
ஏகாதிபத்தியத்திற்கு
இருப்புக் கொள்ளாது
முதலில் வந்து
பழங்களைப் பறிக்கும்
அப்புறம் ஒரு நாள்
காய்களைப் பறிக்கும்
அவசரமென்றால்
பிஞ்சையும் பறிக்கும்
விளையாட்டிற்காய்
பூக்களைப் பறிக்கும்
வேதனையூட்ட அதன்
வேர்களைக் கிள்ளும்
பட்ட மரமாக்கிப் பின்
வெட்டிவிடும் விறகிற்காய்.





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment