ஏகாதிபத்தியத்திற்கு
இருப்புக் கொள்ளாது
முதலில் வந்து
பழங்களைப் பறிக்கும்
அப்புறம் ஒரு நாள்
காய்களைப் பறிக்கும்
அவசரமென்றால்
பிஞ்சையும் பறிக்கும்
விளையாட்டிற்காய்
பூக்களைப் பறிக்கும்
வேதனையூட்ட அதன்
வேர்களைக் கிள்ளும்
பட்ட மரமாக்கிப் பின்
வெட்டிவிடும் விறகிற்காய்.
- படித்ததில் பிடித்தது -
- படித்ததில் பிடித்தது -

No comments:
Post a Comment