Monday, November 15, 2010

நீ கிள்ளினால்......

நீ ஓரிடத்தில் கிள்ளினால்

கிள்ளிய இடம் வெக்கத்தில் சிரிக்கிறது
கிள்ளாத இடங்கள்
கோவத்தில் சிவக்கின்றன
இனி கிள்ளுவதென்றால்
எல்லா இடங்களிலும் கிள்ளிவை


அடப்பாவி கேட்டுக்கேட்டு
கிள்ளுவாங்குகிற
கிறுக்கியாக என்னை மாற்றி விட்டாயே!


நீ கிள்ளும் போது
ஆ வலிக்கிறது என்று கத்தினாலும்
வலி நின்ற பிறகு
எப்போதும் வலிக்கிற மாதிரி
கிள்ளத் தெரியாதா உனக்கு என்று
திட்டவே தோன்றுகிறது



எழுதியவர் - தபு சங்கர்

No comments:

Post a Comment