Sunday, October 9, 2011

இளங்காலை பொழுது


வானிலே நின்று
சில்மிசமாய் கண்சிமிட்டும்
அந்த விடிவெள்ளி

விடைபெற காத்து
விட்டு விட்டு மறையும்
அந்த முழு நிலா

பற்பல இசையிலே
பாடி எழுகின்ற
அந்த பறவைகளின் ஓசை

புலந்திடும் பொழுதிற்காய்
புத்துணர்ச்சியாய் கூவுடும்
அந்த சேவலின் ஓசை

புற்களின் மேலிந்து
புவியை விட்டு அகலவிருக்கும்
அந்த பனித்துளிகள்

கதிரவன் வருகைக்காய்
கனிவோடு காத்திருக்கும்
அந்த தாமரை மலர்கள்

ஓரெல்லாம் கேட்கும் படி
நாதமாய் ஒலி எழுப்பும்
அந்த கோயில் மணி

கல கல ஓசையுடன்
சாலையை கடந்திடும்
அந்த காளை மாட்டு வண்டிகள்

கண் குளிர் ஆடையுடன்
பரிசுத்த மனதான
அந்த பள்ளி செல் மாணவர்கள்

கடமையின் நிமித்தம்
வாகனங்களில் விரையும்
தொழிலாளர் கூட்டம்

இத்தனையும் இங்கே
இனிமையாய் வரவேற்றது
இளங்காலை பொழுதை!

1 comment:

  1. மிகவும் அருமையான கவிதை....

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete