Friday, June 24, 2011

என் உறவோடு இருப்பவளே!

உன்னோடு பேசாத
ஒவ்வொரு நிமிடங்களும்
உயிரை கொல்லும்
நொடிகளாய் எனக்கு!

என் ஒவ்வொரு அசைவின்
ஒட்டுமொத்த செயல்களும்
உன் மூச்சினில் தானே
ஒருமித்து வாழ்கிறது!

நான் தொட்டிடும் அனைத்தும்
உன் பெயரை சொல்லி
உத்தரவு கேட்கிறது
உயிரையும் கொல்கிறது!

உனை விலகி என்னால்
ஒரு செயலும் இங்கு
முடியவில்லை அன்பே
உயிரோடு கலந்து
என் உறவோடு இருப்பவளே!

1 comment:

  1. ungalen kavithai arumai enmanthil ulla varegal anaithu ungal kavithaiel veli patture gerathu

    ReplyDelete