Wednesday, June 22, 2011

ஏது தான் உறவுகள்?

என் கேள்விக்குறியான
எதிர்காலத்தினை நினைத்து
என்றும் நான்
சஞ்சலப்பட்டதில்லை!
என் நெஞ்சோடு நீ என்றும்
ஒன்றாகி இருந்ததால்!

இன்று நீயே என்னை
எடுத்தெறிந்து போய்விட்டால்
எனக்கென்று இங்கு
ஏது தான் உறவுகள்?
உயிருள்ளவரை காத்திருப்பேன்
என் உற்ற நட்பே உனக்காக!

No comments:

Post a Comment