வாழ்க்கை என்ற நந்தவனத்தில்
வாழுகின்ற காலத்தில்
பூத்துக் குலுங்கும் புஷ்பங்கள்
மகிழ்ச்சி என்ற பூக்களே!
கவலை என்ற வெயில் பட்ட
காலமதில் வாடினாலும்
மகிழ்ச்சி என்ற மழைத் துளியால்
மறுபடியும் உயிர் பெறும்
பூத்துக் குலுங்கும் புஷ்பங்கள்
மகிழ்ச்சி என்ற பூக்களே!
கவலை என்ற வெயில் பட்ட
காலமதில் வாடினாலும்
மகிழ்ச்சி என்ற மழைத் துளியால்
மறுபடியும் உயிர் பெறும்
சுற்றுகின்ற சக்கரமாய்
சுழலுகின்ற வாழ்க்கையிலே
பூக்கின்ற பூக்களுக்கும்
சோதனைகள் பல்லாயிரம்
பூக்கின்ற பூக்களுக்கும்
சோதனைகள் பல்லாயிரம்
பூக்கள் என்று பிறந்துவிட்டால்
மகிழ்ச்சி என்ன சோகம் என்ன
மாறிமாறி வந்தாலும்
ஆயுள் காலம் அற்பமே!
மாறிமாறி வந்தாலும்
ஆயுள் காலம் அற்பமே!
வாழுகின்ற வாழ்க்கையில்
மகிழ்ச்சிகளால் மலர்ந்திடாது
சோகத்தால் துவள்ந்திடாது
நடுநிலையாய் இருந்து விடு
வாழ்க்கை என்றும் பசுமையாய்
பரந்து கிடக்கும் உன் பாதங்களில்!
சோகத்தால் துவள்ந்திடாது
நடுநிலையாய் இருந்து விடு
வாழ்க்கை என்றும் பசுமையாய்
பரந்து கிடக்கும் உன் பாதங்களில்!
நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார். இது காதலர் சரணம் அல்ல. பொதுவான மனித வாழ்க்கை
ReplyDelete