Wednesday, June 15, 2011

அழியாத கோலமாய்

அன்பாக எனையணைத்து
ஆருயிர் நட்பாக
அடைக்கலம் தந்தமையால்
அன்பே நீ இங்கு
அழியாத கோலமாய்
என் அடி நெஞ்சின் ஆழத்தில்!

ஆயுளுக்கும் உன் முகம்
அடி நெஞ்சில் பதிந்தமையால்
அநாதை என்ற நிலை
ஆயுளுக்கும் எனக்கில்லை
என் மரணம் கூட
அன்பே உன் நினைவுகளோடு!

3 comments:

  1. நினைவுகள் மீட்டப் படும் போது எதோ ஒரு சுகம்.

    ReplyDelete
  2. நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete
  3. அன்புடையீர் அருமையான கவிதை
    அன்புடன் கந்தவீல் குமரியிலிருந்து

    ReplyDelete