கருவறையை நேசித்தேன்பத்து திங்களில் பறிபோனது
பாசத்தை நேசித்தேன்
பணத்தை பார்த்ததும் தடுமாறியது
நிலவை நேசித்தேன்
வெகு தொலைவில் நின்றது
காற்றை நேசித்தேன்
கைக்குள் சிக்க மறுத்தது
மழையை நேசித்தேன்
என்னை தொட்டுவிட்டு சென்றது
இரவை நேசித்தேன்
விடியலை கண்டதும் விடைபெற்றது
கனவை நேசித்தேன்
தூக்கம் கலைந்ததும் கலைந்தது
அன்பே உன்னை நேசித்தேன்
உயிருள்ளவரை இருப்பாய் என்று!
No comments:
Post a Comment