Sunday, August 21, 2011

உன் பிரிவால்

அன்பே

இத்தனை நாட்களாய் உன்

ஸ்பரிசங்களை தீண்டிட

எத்தனை ஏக்கங்கள்

என் மனமென்ற கூட்டுக்குள்

என் ஏக்கமான பசிக்கு

இதமாக தீனி போட

ஒட்டு மொத்தமாய் இன்று

உன் ஸ்பரிசங்கள் சங்கமம்

என் உடலில் மெலிதான

சிலிர்ப்புக்கள் எத்தனை தான்

இது என் வாழ்வின்

எதிர்பாரா இன்ப அதிர்ச்சி

இப்படி புலம்பியது

என் வீட்டு சாய்மனை இருக்கை


அருகிருந்தும் உன்னை

அன்போடு மடியேந்த

முடிந்திடாமல் நான் பட்ட

முடிவில்லா துன்பத்தை

புரிந்துகொள்ள உன்னாலே

முடியாமல் போனதால்

என் உணர்வுகளை உள்ளுக்குள்

ஊமையாக புதைத்து விட்டேன்

என் ஏக்கத்திற்கு மருந்தாக

இன்று என் மடியிலே தவழும் உன்

பொன் மேனி தொட்டுவிட்ட

இதமான மகிழ்வில் நான்

இப்படி என்னை பார்த்து

ஏளனம்செய்தது

என் வீட்டு இருக்கைகள்


இத்தனை நாட்களாய்

என்னை தாங்கி இருந்துவிட்ட

உன் மடி என்ற இருக்கையும்

மாரபென்ற சார்மனையும்

என்னை விட்டு இன்று

தொலை தூரம்சென்றமையால்

என் வீட்டு பொருட்களெல்லாம்

என்னிடம் சீண்டுகிறது

தாம் நெடு நாட்களாக

தேக்கிவைத்த ஆசைகள்

இதமாக தீர்ப்பதற்கு

1 comment:

  1. இது என் வாழ்வின்
    எதிர்பாரா இன்ப அதிர்ச்சி
    இப்படி புலம்பியது
    என் வீட்டு சாய்மனை இருக்கை/


    ஆகா சாய்மனை கூட புலம்புதென்றால்..
    அப்புறம் நீங்க என்ன செய்யிறீங்களோ தெரியல...hahaha
    அழகான கவிதை..
    நல்லாயிருக்குங்க...
    பாராட்டுக்கள்...தோழி

    ReplyDelete