Saturday, August 27, 2011

பரிசுத்த உறவுகள்


பல சோகம் உனக்காக
பாரினிலே வந்தாலும்
பாசமாக உன்னை
பாதி உயிர் போகையிலும்
பக்கத்திருந்து பார்த்து
பரிவாய் அரவணைப்பவள்
பாசமான தாய் என்ற
பரிசுத்த உறவு மட்டுமே!

பெற்றவளிற்கு அப்புறமாய்
நீ பேதலித்து நிற்கையிலே
தோளோடு தோள் கொடுத்து
தொலைந்த துன்பங்களுக்கும்
தோற்று நிற்கும் வேளைக்கும்
தயங்காமல் வந்து நின்று
தன் துணை நல்கிடுவார்
உன் உற்ற உறவென்ற
உண்மையான நட்புக்கள்!

No comments:

Post a Comment