Thursday, July 14, 2011

இல்லை என்ற வாழ்க்கையில்

என் வாழ்க்கை என்னும்
வானத்தில்
வானவில்கள் வந்ததில்லை
வந்து போன மேகங்கள்
மழைத்துளிகள் தந்ததில்லை

கடந்த கால கவலைகள்
நெஞ்சை விட்டு நீங்கவில்லை
அதை நினைத்து நினைத்து
மனதும் உறங்கவில்லை

நான் ஓய்ந்து போகும் வரை
ஓயாமல் துயரங்கள்
என்னை விடுவதாயில்லை
எனக்கு மட்டும் ஏன் இப்படி
எதுவுமே தெரியவில்லை

இன்னும் இந்த உலகை
நான் முழுதாய் அறியவில்லை
இத்தனை இருந்தும் நான்
இங்கு அழுவதில்லை
சாதிப்பேன் என்ற நம்பிக்கையில்
இன்னும் நான் சாகவில்லை!

3 comments:

  1. அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. சாதிப்பேன் என்ற நம்பிக்கையில்
    இன்னும் நான் சாகவில்லை!


    அருமையான கவிதை வாழ்ந்து காட்டுங்கள . பாராட்டுக்கள்.

    ReplyDelete