Sunday, May 29, 2011

எண்ணிப் பார்க்கிறேன்

நான் நானாகவும்
நீ நீயாகவும்
இருந்த அந்த நாட்களை
எண்ணிப் பார்க்கிறேன்
நினைவில் இல்லை

இன்று
நான் நீயாகவும்
நீ நானாகவும்
முழுமையாக
மாறிவிட்டோம்

உன் பிரிவு என்னையும்
என் பிரிவு உன்னையும்
சில நாட்கள் என்றாலும்
யுகங்களாக்கி பார்க்கிறது
காரணம் மட்டும் புரியவில்லை

நினைத்துப் பார்க்கவே
நிச்சயமாய் முடியவில்லை
நமக்குள் எப்போதாவது
நிரந்தரமான பிரிவினை........!

3 comments:

  1. >>நமக்குள் எப்போதாவது
    நிரந்தரமான பிரிவினை..

    நுட்பமான வரிகள்

    ReplyDelete
  2. நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete