Tuesday, May 10, 2011

புனிதமான நட்பு

அன்பே!
உன் குழந்தைதனத்திற்குள்
குடிகொண்டவளுக்குள்
நானும் ஒருத்தி தான்!

இருந்தும் அக் குழந்தை
சமூகத்தின் பார்வைக்குள்
அமிழ்ந்து விட கூடாதென
ஆயிரம் முறை
எண்ணுபவளும் நான் தான்

நான் பொறுப்பற்று நடந்தால்
பொறுப்பானவள் என்று
பாராட்டு உனக்கு
நான் வாழ்வில் வசதியாக வாழ்ந்தால்
அதிஷ்டமில்லாதவள் என
உனக்கு திட்டு!
இது தான் சமூகம்

உன் பிழைகள் என்னையோ
என் பிழைகள் உன்னையோ
காயப்படுத்தியதுமில்லை
கோவப்படுத்தியதில்லை

இத்தனை உண்மையான
இனிய எம் உறவுதான்
புனிதமான நட்பா?
சொல்லிவிடு அன்பே!

2 comments:

  1. கவிதை நல்லா வந்து இருக்குது.

    ReplyDelete