Saturday, May 28, 2011

நட்புக்காக..........!

எதிர்பாராமல் கிடைத்த
இனிய நட்பு நீ
பல காலம் பழகாமல்
பலவிடயம் பகிர்கிறாய்

இருந்தும் மறைக்கிறாய்
இனிய ஓர் காரணத்தை
இனிமையாய் கேட்டாலும்
இலாவாக நழுவுகிறாய்

நம் நட்பிற்கான காரணத்தை
நானும் கேட்டு விட்டேன்
நயமாக உன்னிடம்
பல தடவைக்கு மேலாக

இருந்தும் நீ இங்கு
விலாங்கு மீனை போல
நழுவியே செல்கிறாய்
நாசூக்காய் என்னிடம்

காரணம் கேட்டு நான்
களைத்தே போய் விட்டேன்
கவலையில்லை இனி எனக்கு
காரணமும் தேவையில்லை

புரிந்து கொண்டேன்
இன்று நான்
காரணம் கொண்டு இங்கு
வருவது நட்பல்ல என!

7 comments:

  1. புரிதல்தான் நட்பு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்தும் விதமாக தங்களின் கவிதை அருமை

    ReplyDelete
  2. நன்றி நண்பர் பனித்துளி சங்கர்

    ReplyDelete
  3. >>காரணம் கொண்டு இங்கு
    வருவது நட்பல்ல என!

    குட் அண்டர்ஸ்டேண்டிங்க்

    ReplyDelete
  4. enakku perumayaga irukku dear

    ReplyDelete
  5. //புரிந்து கொண்டேன்
    இன்று நான்
    காரணம் கொண்டு இங்கு
    வருவது நட்பல்ல என!//தங்களின் கவிதை அருமை

    ReplyDelete
  6. நன்றி நண்பர் போளூர் தயாநிதி

    ReplyDelete
  7. நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete