உன் நட்பைகாதல் செய்தேன்
கவிதை வரவில்லை
கை கோர்த்து திரிந்தேன்
சஞ்சலம் வரவில்லை
தோளிலே சாய்ந்தேன்
தோழமை துளிர்த்தது
மனம் விட்டு பேசினேன்
சோகமெல்லாம் மறைந்தது
எனைவிட்டு பிரிந்தாய்
இதயமே நொறுங்கியது
குதூகலம் தொலைந்தது
வாழ்க்கையே புரியாமல்
கண்கள் பனித்தது
இதை எப்படி சொல்வது
இனி உனக்கு அன்பே
இதற்கு பெயர் தான்
இனிய நட்பா?
நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தும் எந்த மனிதனும் கடவுளுக்கு சமம். நட்பென்பது நம்மை வழி நடத்துவது.... நடக்கும் வழி சொல்லும் நட்பின் தன்மை...
ReplyDelete