நீ சாலையோரம் நடந்து போகையில்
உன் கை பட்டு
பூத்த பூக்களைப் போல
உன் விழி பட்டு
என் இதயப் பூவையும் மலர வைத்தாய்
எனக்கே தெரியாத அதிசயங்களை
எனக்குள்ளே நடக்க வைத்தாய்
எனது கிறுக்கல் எல்லாம்
கவிதையானது
எனது பேச்சுக்கள் எல்லாம்
பேச்சு இழந்து போனது
ஒவ்வொரு நொடிகளும்
உன்னை பார்க்க அடம் பிடிக்கையில்
உன்னை காதல் கொள்ளாமல் இருக்க
நான் மட்டும் விதிவிலக்கா?
எழுதியவர் - மிருணன்
எழுதியவர் - மிருணன்

நல்லா இருக்கு கவிதை....
ReplyDeleteகண்டிப்பா இல்லைங்க.. காதல் கொள்ளுங்கள்... :)
ReplyDeletearumaiyana kaathaal varigal.....
ReplyDeleteneengal viraivil kaathal vayappadum neram nerungi vittathu endru ninaikiren
உன்னை காதல் கொள்ளாமல் இருக்க
ReplyDeleteநான் மட்டும் விதிவிலக்கா?
அருமையான வரிகள்
நன்றி நண்பர் தமிழ் காதலன்
ReplyDelete